பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது பாபுராவ் சிஞ்சனசூரு ஜவுளி துறை அமைச்சராக இருந்தார். அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட போது அவரின் பதவி பறிபோனது. இதைத்தொடர்ந்து அதிருப்தியில் இருந்த பாவுராவ், சில நாட்களுக்கு முன்பு பாஜவில் ஐக்கியமானார். இதற்கிடையே வங்கி காசோலை பவுன்ஸ் ஆன சம்பவத்தில் மக்கள் பிரதிநிதி நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்கு பாபுராவ் வரவில்லை. சாட்சி விசாரணையின்போது பாபுராவ் ஆஜராகவில்லை என்பதால் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது.
வாரண்ட் உத்தரவை வாபஸ் பெறவேண்டும் என்று பாபுராவ் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்திருந்த நிலையில் மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் அவரை நேற்று கைது செய்தது. அஞ்சன் சாந்தவீர் என்பவர் தொடுத்த வழக்கில் மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி